என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Byமாலை மலர்12 July 2020 2:11 PM GMT (Updated: 12 July 2020 2:11 PM GMT)
கோவிலில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் அதன்பின்பு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்
வடமதுரை:
அய்யலூர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). பட்டதாரி. இவர் விவசாயம் செய்து வருகிறார். புத்தூரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (20). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இருவரும் பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். முருகேஸ்வரியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு நேற்று முன்தினம் வெளியேறினர். பின்னர் அவர்கள் வீரப்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்பு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் காதலர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீசார், காதலர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மணமகனின் வீட்டில் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் அவர்களுடன் மணமக்களை அனுப்பி வைத்தனர்.
அய்யலூர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). பட்டதாரி. இவர் விவசாயம் செய்து வருகிறார். புத்தூரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (20). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இருவரும் பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். முருகேஸ்வரியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு நேற்று முன்தினம் வெளியேறினர். பின்னர் அவர்கள் வீரப்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்பு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் காதலர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீசார், காதலர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மணமகனின் வீட்டில் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் அவர்களுடன் மணமக்களை அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X