என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு- அரசின் உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
Byமாலை மலர்12 July 2020 11:00 AM GMT (Updated: 12 July 2020 11:00 AM GMT)
கொரோனா பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அரசின் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல்:
கொரோனா பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அரசின் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 19-ந் தேதி, 26-ந் தேதிகளில் எந்த விதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
இந்த நாட்களில் நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள டீக்கடைகள், மளிகைக்கடைகள், காய்கறிகடைகள், உழவர்சந்தை, அனைத்து விதமான இறைச்சி விற்பனை கடைகள், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட வேண்டும்.
பால் விற்பனை, மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே செயல்படும். தீவிர மருத்துவ காரணங்கள் தவிர்த்து, தேவையின்றி வாகனங்களில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
முழுமையான ஊரடங்கு அமலில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச்சட்டம் மற்றும் கொள்ளை நோய் தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அரசின் உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 19-ந் தேதி, 26-ந் தேதிகளில் எந்த விதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
இந்த நாட்களில் நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள டீக்கடைகள், மளிகைக்கடைகள், காய்கறிகடைகள், உழவர்சந்தை, அனைத்து விதமான இறைச்சி விற்பனை கடைகள், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட வேண்டும்.
பால் விற்பனை, மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே செயல்படும். தீவிர மருத்துவ காரணங்கள் தவிர்த்து, தேவையின்றி வாகனங்களில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
முழுமையான ஊரடங்கு அமலில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச்சட்டம் மற்றும் கொள்ளை நோய் தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X