என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கயத்தாறு அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து சலவை தொழிலாளி பலி
Byமாலை மலர்12 July 2020 9:27 AM GMT (Updated: 12 July 2020 9:27 AM GMT)
கயத்தாறு அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்த விபத்தில் சலவை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்தவர்கள் சுடலை (வயது 35), அரிகிருஷ்ணன், அசோக்குமார், கார்த்திக். இவர்கள் 4 பேரும் நண்பர்கள். சுடலை சலவை தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் 4 பேரும் திருமலாபுரத்தில் இருந்து காரில் கடம்பூருக்கு சென்றனர். அங்கு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் திருமலாபுரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை அரிகிருஷ்ணன் ஓட்டினார். திருமலாபுரம் அருகே உள்ள ஒரு வளைவில் வந்தபோது, திடீரென்று கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றுக்குள் கார் விழுந்தபோது அதன் கதவு திறந்ததில் சுடலை வெளியே தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அரிகிருஷ்ணன், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சுடலைக்கு இசக்கியம்மாள் (30) என்ற மனைவியும், 5, 6 வயதில் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கிணற்றுக்குள் கார் பாய்ந்த விபத்தில் சலவை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்தவர்கள் சுடலை (வயது 35), அரிகிருஷ்ணன், அசோக்குமார், கார்த்திக். இவர்கள் 4 பேரும் நண்பர்கள். சுடலை சலவை தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் 4 பேரும் திருமலாபுரத்தில் இருந்து காரில் கடம்பூருக்கு சென்றனர். அங்கு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் திருமலாபுரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை அரிகிருஷ்ணன் ஓட்டினார். திருமலாபுரம் அருகே உள்ள ஒரு வளைவில் வந்தபோது, திடீரென்று கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றுக்குள் கார் விழுந்தபோது அதன் கதவு திறந்ததில் சுடலை வெளியே தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அரிகிருஷ்ணன், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சுடலைக்கு இசக்கியம்மாள் (30) என்ற மனைவியும், 5, 6 வயதில் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கிணற்றுக்குள் கார் பாய்ந்த விபத்தில் சலவை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X