என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 ஊழியர்களுக்கு கொரோனா- திருச்செந்தூரில் பிரபல ஜவுளிக்கடை மூடப்பட்டது
Byமாலை மலர்11 July 2020 2:00 PM GMT (Updated: 11 July 2020 2:00 PM GMT)
3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்செந்தூரில் பிரபல ஜவுளிக்கடை மூடப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 27 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில், இதுவரை 16 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 4 பேர் திருச்செந்தூரிலும், 7 பேர் தூத்துக்குடியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அந்த கடையில் பணியாற்றும் 10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில், ஜவுளிக்கடை நேற்று மூடப்பட்டது. தொடர்ந்து ஜவுளிக்கடை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நகர பஞ்சாயத்து சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
தற்போது திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில், திருச்செந்தூர், பரமன்குறிச்சி, உடன்குடி, ஆறுமுகநேரி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 33 ஆண்கள், 7 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 42 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்செந்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 27 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில், இதுவரை 16 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 4 பேர் திருச்செந்தூரிலும், 7 பேர் தூத்துக்குடியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அந்த கடையில் பணியாற்றும் 10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில், ஜவுளிக்கடை நேற்று மூடப்பட்டது. தொடர்ந்து ஜவுளிக்கடை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நகர பஞ்சாயத்து சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
தற்போது திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில், திருச்செந்தூர், பரமன்குறிச்சி, உடன்குடி, ஆறுமுகநேரி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 33 ஆண்கள், 7 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 42 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X