என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகேந்திரமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது
Byமாலை மலர்11 July 2020 10:58 AM GMT (Updated: 11 July 2020 10:58 AM GMT)
மகேந்திரமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள சாமன்கொல்லை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரது உறவினர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த முனியப்பன் மகன் மூர்த்தி (வயது 24). இவர் சூளகிரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 1-ந்தேதி மாணவியின் வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தது. இதற்காக மூர்த்தி சாமன்கொல்லை கிராமத்திற்கு வந்துள்ளார்.
அவர், கடைக்கு செல்வதாக கூறி மாணவியுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மகளை காணாத பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மூர்த்தி, மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
சூளகிரி பகுதியில் தங்கி இருந்த மூர்த்தியை போலீசார் கைது செய்து மாணவியை மீட்டனர். பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீட்கப்பட்ட மாணவியை தர்மபுரியில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X