என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய காரணம் என்ன?- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
Byமாலை மலர்11 July 2020 8:59 AM GMT (Updated: 11 July 2020 8:59 AM GMT)
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய காரணம் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:
சென்னை அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட அத்திப்பட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்து ஆய்வு செய்த பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையை பொறுத்த வரை முழு ஊரடங்கால் தொடர் பாதிப்பை தடுக்க முடிந்தது. பரிசோதனை கூடுதலாக செய்யப்பட்டது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். பொதுமக்கள் அனைவரும் முழு கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றினார்கள்.
ஊரங்குக்குப் பின்னும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், வயதானவர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட அத்திப்பட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்து ஆய்வு செய்த பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையை பொறுத்த வரை முழு ஊரடங்கால் தொடர் பாதிப்பை தடுக்க முடிந்தது. பரிசோதனை கூடுதலாக செய்யப்பட்டது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். பொதுமக்கள் அனைவரும் முழு கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றினார்கள்.
ஊரங்குக்குப் பின்னும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், வயதானவர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X