search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை   கோப்புப்படம்
    X
    கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

    திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா

    திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 654 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து வந்த மன்னார்குடி பகுதியை சேர்ந்த ஒருவர், துபாயில் இருந்து வந்த வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஒருவர், குவைத்தில் இருந்து வந்த நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    மேலும் திருவாரூர் பகுதியை சேர்ந்த 2½ வயது பெண் குழந்தை உள்பட 3 பேர், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், நீடாமங்கலம் மற்றும் குடவாசல் பகுதியை சேர்ந்த தலா ஒருவர், மன்னார்குடி பகுதியை சேர்ந்த 4 பேர் உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×