என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கற்கள் ஏற்றிய லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
Byமாலை மலர்10 July 2020 10:41 AM GMT (Updated: 10 July 2020 10:41 AM GMT)
மொரப்பூர் அருகே கற்கள் ஏற்றிய லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி:
மொரப்பூர் அருகே அப்பியம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த முட்புதர்கள் அண்மையில் அகற்றப்பட்டன. இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த கற்களை நேற்று முன்தினம் இரவு வெட்டி பொக்லைன் எந்திரங்கள் மூலமாக லாரிகளில் ஏற்றும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கற்களை வெட்டி எடுத்து லாரியில் ஏன் ஏற்றுகிறீர்கள்? என்று அந்த பணியில் ஈடுபட்டவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். இதுதொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கற்கள் ஏற்றிய லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் விடிய,விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான அனுமதியின்றி கனிமவளங்கள் எடுத்து செல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி நேற்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X