search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பாதுகாப்பு உடையை கவ்விச்சென்ற நாய்
    X
    கொரோனா பாதுகாப்பு உடையை கவ்விச்சென்ற நாய்

    கொரோனா பாதுகாப்பு உடையை கவ்விச்சென்ற நாய்- அச்சத்தில் மக்கள்

    கோவையில் கொரோனா சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவர்களின் ஆடையை நாய் ஒன்று கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை கொடிசியா டி அரங்கில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 400 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்படாமல் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கொரோனா தடுப்பு கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள் அங்குள்ள ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. கொடிசியா பகுதியில் தெருநாய் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

    இந்தநிலையில், உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடையை நாய் ஒன்று கவ்வி இழுத்துச்சென்றது. இதனால் அந்த நாய்க்கு கொரோனா பாதிப்பு வர வாய்ப்புள்ளதுடன், அந்த பகுதியில் நடமாடும் பொதுமக்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசங்கள் மற்றும் மருத்துவக்கழிவுகளை மிகவும் பாதுகாப்புடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×