என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதுகாப்பு உடையை கவ்விச்சென்ற நாய்- அச்சத்தில் மக்கள்
Byமாலை மலர்10 July 2020 8:48 AM GMT (Updated: 10 July 2020 8:48 AM GMT)
கோவையில் கொரோனா சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவர்களின் ஆடையை நாய் ஒன்று கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:
கோவை கொடிசியா டி அரங்கில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 400 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்படாமல் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கொரோனா தடுப்பு கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள் அங்குள்ள ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. கொடிசியா பகுதியில் தெருநாய் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
இந்தநிலையில், உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடையை நாய் ஒன்று கவ்வி இழுத்துச்சென்றது. இதனால் அந்த நாய்க்கு கொரோனா பாதிப்பு வர வாய்ப்புள்ளதுடன், அந்த பகுதியில் நடமாடும் பொதுமக்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசங்கள் மற்றும் மருத்துவக்கழிவுகளை மிகவும் பாதுகாப்புடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கோவை கொடிசியா டி அரங்கில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 400 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்படாமல் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கொரோனா தடுப்பு கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள் அங்குள்ள ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. கொடிசியா பகுதியில் தெருநாய் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
இந்தநிலையில், உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடையை நாய் ஒன்று கவ்வி இழுத்துச்சென்றது. இதனால் அந்த நாய்க்கு கொரோனா பாதிப்பு வர வாய்ப்புள்ளதுடன், அந்த பகுதியில் நடமாடும் பொதுமக்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசங்கள் மற்றும் மருத்துவக்கழிவுகளை மிகவும் பாதுகாப்புடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X