என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செங்கோடு அருகே சூதாடிய 21 பேர் கைது - 3 கார்கள் பறிமுதல்
Byமாலை மலர்10 July 2020 8:45 AM GMT (Updated: 10 July 2020 8:45 AM GMT)
திருச்செங்கோடு அருகே, சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.4¾ லட்சம், 7 மோட்டார் சைக்கிள்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே உள்ள சடையகவுண்டம்பாளையம் பெரிய தோட்டம் பகுதியில் சிலர் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், சிறப்பு பிரிவு போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட திருச்செங்கோடு, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த காமராஜ் (வயது 43), அசோகன் (36), அங்கப்பன் (42), செந்தில்குமார் (42), பாஸ்கரன் (49) உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.4 லட்சத்து 76 ஆயிரம், 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X