என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் வழக்கு- களத்தில் இறங்கும் சிபிஐ
Byமாலை மலர்10 July 2020 5:58 AM GMT (Updated: 10 July 2020 5:58 AM GMT)
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு குறித்து சிபிஐ குழுவினர் மதுரையில் ஆலோசனையில் நடத்தினர்.
மதுரை:
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ இன்று தொடங்குகிறது.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் இன்று மதுரை வருகின்றனர். இதற்கிடையே ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான குழு மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது.
சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் வழங்க உள்ளார். அதன்பின்னர் வழக்கு தொடர்பான கோப்புகளை பெற்றதும், முதலில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளது.
பெண் காவலர் ரேவதி முதல் அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். சாத்தான்குளம் சென்று சம்பவம் தொடர்பான அனைத்து இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர்.
இதற்கிடையே தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி, இதுவரை 10 போலீசாரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ இன்று தொடங்குகிறது.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் இன்று மதுரை வருகின்றனர். இதற்கிடையே ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான குழு மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது.
சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் வழங்க உள்ளார். அதன்பின்னர் வழக்கு தொடர்பான கோப்புகளை பெற்றதும், முதலில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளது.
பெண் காவலர் ரேவதி முதல் அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். சாத்தான்குளம் சென்று சம்பவம் தொடர்பான அனைத்து இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர்.
இதற்கிடையே தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி, இதுவரை 10 போலீசாரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X