search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் - முக ஸ்டாலின்

    சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீடிக்கின்ற நிலையில், “நிலுவையில் உள்ள மற்றும் இந்த ஆண்டிற்கான சொத்து வரியை உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி செலுத்த வேண்டும்” என்று சென்னை மாநகராட்சி சார்பில் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது.

    கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலிருந்து வெளியூர் போனவர்கள் திரும்பி வரவில்லை. வேலை, தொழில், சுய தொழில், வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளார்கள். தங்கள் வாழ்க்கையை இனி ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டுமோ என்ற மிகப்பெரிய அச்சத்தில் சென்னைவாசிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆகவே சென்னை மாநகராட்சி இந்த வரி வசூலை குறைந்தபட்சம் இன்னும் 6 மாதத்திற்காவது தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 
    Next Story
    ×