search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சென்னையில் மேலும் 1,216 பேருக்கு கொரோனா தொற்று

    சென்னையில் மேலும் 1,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 3,994 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 74,167-ல் இருந்து 78,161 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் சென்னையில் மேலும் 1,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னையில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×