என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 10 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி
Byமாலை மலர்9 July 2020 1:31 PM GMT (Updated: 9 July 2020 1:31 PM GMT)
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஐடி நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. டைடல் பார்க், பழைய மகாபலிபுரம் சாலை, ராமாபுரம் டி.எல்.எஃப் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கானோர் வேலைப்பார்த்து வருகின்றனர்.
பொது முடக்கம் காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டதால் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 6-ந்தேதில் இருந்து தமிழக அரசு ஐடி நிறுவனங்களுக்கு தளர்வு அளித்தது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment Zones) மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் 10 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X