search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

    திருவண்ணாமலையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் அரசு வழங்கிய 2 ஆண்டுகளுக்குரிய விடுமுறை ஊதியத்தை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதால் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். கையுறை, முககவசம், சானிடைசர், பாதுகாப்பு உடை போன்ற அனைத்து பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் கலந்து கொண்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், டெக்னீசியன்கள் பலர் சமூக இடைவெளியை கடைபிடித்திருந்தனர்.
    Next Story
    ×