என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேன்கனிக்கோட்டையில் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி
Byமாலை மலர்9 July 2020 9:09 AM GMT (Updated: 9 July 2020 9:09 AM GMT)
தேன்கனிக்கோட்டை அருகே விவசாயிகளின் உரிமை போராட்டத்தின்போது உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா கோட்டை உளிமங்கலத்தில் விவசாயிகளின் உரிமை போராட்டத்தின்போது உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் விவசாய சங்க தலைவர் மறைந்த நாராயணசாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் விவசாய சங்க கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர்கள் கோணப்பன், வெங்கடேஷ், மாவட்ட தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் சின்னசாமி, ஒன்றிய தலைவர் மணி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கியில் நிலுவையில் உள்ள விவசாய நகைக்கடனை தள்ளுபடி செய்து தர வேண்டும். மத்திய, மாநில அரசு விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்து புதிய கடன்களை வழங்க வேண்டும். மின்சாரத்தை தனியார் மயமாக்கக்கூடாது. இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். விவசாய மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்த கூடாது. ஏரி, குளம், குட்டைகளை தூர்வார வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X