search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்
    X
    போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்

    தேன்கனிக்கோட்டையில் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி

    தேன்கனிக்கோட்டை அருகே விவசாயிகளின் உரிமை போராட்டத்தின்போது உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகா கோட்டை உளிமங்கலத்தில் விவசாயிகளின் உரிமை போராட்டத்தின்போது உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் விவசாய சங்க தலைவர் மறைந்த நாராயணசாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் விவசாய சங்க கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர்கள் கோணப்பன், வெங்கடேஷ், மாவட்ட தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் சின்னசாமி, ஒன்றிய தலைவர் மணி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கியில் நிலுவையில் உள்ள விவசாய நகைக்கடனை தள்ளுபடி செய்து தர வேண்டும். மத்திய, மாநில அரசு விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்து புதிய கடன்களை வழங்க வேண்டும். மின்சாரத்தை தனியார் மயமாக்கக்கூடாது. இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். விவசாய மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்த கூடாது. ஏரி, குளம், குட்டைகளை தூர்வார வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    Next Story
    ×