search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வானூர் கூட்டுறவு வங்கி செயலாளருக்கு கொரோனா

    வானூர் கூட்டுறவு வங்கி செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து,வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது. ஒரு வாரத்துக்கு வங்கி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒட்டை - வானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக புதுவை பகுதியை சேர்ந்தவர் உள்ளனார். மேலும் 5 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் வங்கி செயலாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதன் முடிவு நேற்று முன்தினம் மாலை தெரியவந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கூட்டுறவு வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது. நோய் பரவலை தடுக்கும் வகையில் ஒரு வாரத்துக்கு வங்கி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×