என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலை கிராம மக்கள் சாலை வசதி கேட்டு போராட்டம்
Byமாலை மலர்8 July 2020 11:12 AM GMT (Updated: 8 July 2020 11:12 AM GMT)
மலை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்ணக் கரை பகுதிக்கு வந்து ரேஷன்கார்டுகள் மற்றும் ஆதார் கார்டுகளை கையில் ஏந்தி சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணைக்கு மேலே அகமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி போடி ஒன்றியத்திற்குட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் உள்ள கண்ணக்கரை பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மருதையனூர், சொக்கன்அலை, பட்டூர் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லை.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணக் கரை முதல் மருதையனூர் வரை சாலை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனை கண்டித்து மலை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்ணக் கரை பகுதிக்கு வந்து ரேஷன்கார்டுகள் மற்றும் ஆதார் கார்டுகளை கையில் ஏந்தி சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு மாத காலத்திற்குள் சாலை அமைக்கும் பணியை தொடங்காவிட்டால் அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணைக்கு மேலே அகமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி போடி ஒன்றியத்திற்குட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் உள்ள கண்ணக்கரை பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மருதையனூர், சொக்கன்அலை, பட்டூர் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லை.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணக் கரை முதல் மருதையனூர் வரை சாலை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனை கண்டித்து மலை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்ணக் கரை பகுதிக்கு வந்து ரேஷன்கார்டுகள் மற்றும் ஆதார் கார்டுகளை கையில் ஏந்தி சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு மாத காலத்திற்குள் சாலை அமைக்கும் பணியை தொடங்காவிட்டால் அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X