என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருங்கல் அருகே காண்டிராக்டர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்8 July 2020 9:28 AM GMT (Updated: 8 July 2020 9:28 AM GMT)
கருங்கல் அருகே காண்டிராக்டர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள மிடாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ். இவர் கேரளாவில் கட்டிட காண்டிராக்டராக பணி புரிந்து வந்தார். இவருக்கு கேரளா மாநிலம் அடூர் பகுதியிலும் ஒரு வீடு உள்ளது. கொரோனா பாதிப்பு தொடங்கிய நிலையில் கேரளாவுக்கு சென்ற ஜான்ரோஸ் திரும்பி வரவில்லை. இதனால் மிடாலக்காடு வீட்டை அருகில் உள்ள ருக்மணி ஒருவர் பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் ஜான்ரோஸ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுபற்றி அவருக்கு அந்த பெண் தகவல் கொடுத்தார். அதன்பேரில் ஜான்ரோஸ் வந்து பார்த்து விட்டு, 15 பவுன் நகை கொள்ளைபோனதாக கருங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X