search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் உயிரிழப்பு
    X
    பெண் உயிரிழப்பு

    சிப்காட்டில் மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு

    சிப்காட்டில் மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிப்காட்(ராணிப்பேட்டை):

    ஆற்காடு, கணபதி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி கவிதா (வயது 38). இவர் சிப்காட்டில் உள்ள ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று தொழிற்சாலையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது கவிதாவை மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×