search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
    X
    கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காருக்கு அருகே கிடந்த குப்பைகளில் பிடித்த தீ இந்த காரிலும் பிடித்து எரிந்தது தெரியவந்தது. இந்த கார் யாருடையது? இதன் சேதமதிப்பு எவ்வளவு? என ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×