search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்வர் பழனிச்சாமி
    X
    தமிழக முதல்வர் பழனிச்சாமி

    முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பூரண நலம்பெற வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி

    கொரோனா தொற்றிலிருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி பூரண நலம்பெற வேண்டும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா. வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.வளர்மதிக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ள செய்திகுறிப்பில்,

    முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி


    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பா.வளர்மதி பூரண நலம்பெற இறைவனை தாம் வேண்டுவதாகவும், விரைவில் அவர் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

    ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×