search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராதாகிருஷ்ணன்
    X
    ராதாகிருஷ்ணன்

    கொரோனா நோயாளிகளை ஒதுக்கக் கூடாது - சுகாதாரத் துறை செயலர்

    கொரோனா நோயாளிகளை ஒதுக்கக் கூடாது என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளன.

    இதற்கிடையே, சென்னையில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  மதுரையில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், மதுரையில் கிராமப்புறங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்துதல் முகாம்களில் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    மதுரையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பாதித்த நோயாளிகளை ஒதுக்கக் கூடாது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×