search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    மோகனூர் அருகே விபத்தில் தொழிலாளி பலி

    மோகனூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோகனூர்:

    மோகனூர் வளையப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 1-ந் தேதி மோட்டார் சைக்கிளில் நாமக்கல்லுக்கு சென்று விட்டு பின்னர் அதே ஊரை சேர்ந்த தொழிலாளி ராஜ் (40), மற்றொரு நபர் என 3 பேர் மேட்டுப்பட்டி நோக்கி வந்தனர். அப்போது என்.புதுப்பட்டியில் உள்ள ஓட்டல் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

    இதில் படுகாயமடைந்த ராஜ் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து ராஜ் மனைவி சாந்தி மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×