search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வானிலை ஆய்வு மையம்
    X
    சென்னை வானிலை ஆய்வு மையம்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கூறியுள்ளதாவது:-

    காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி, தேவலாவில் 9, நடுவட்டம் 8, கூடலூர் பஜாரில் 7, அவலாஞ்சியில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் வங்க, அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிக்கு செல்ல வேண்டாம்.

    இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×