search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகை
    X
    மல்லிகை

    பரமத்தி வேலூரில் பூக்கள் விலை உயர்வு

    பரமத்தி வேலூரில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் பூக்கள் விலை உயர்வடைந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.150-க்கும், சம்மங்கி கிலோ ரூ.30-க்கும், அரளி கிலோ ரூ.60-க்கும், ரோஜா கிலோ ரூ.80-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.200-க்கும், ஏலம் போனது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.120-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.400-க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பூக்கள் விலை உயர்வடைந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×