search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் அரிசி பறிமுதல்
    X
    ரேசன் அரிசி பறிமுதல்

    8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- மினிலாரி டிரைவர் கைது

    கேரளாவுக்கு கடத்தி சென்ற 8 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், மினிலாரி டிரைவரை கைது செய்தனர்.
    அழகியமண்டபம்:

    திங்கள்சந்தை ரவுண்டானா பகுதியில் இரணியல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த மினிலாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது தேங்காய் மூட்டைக்கு இடையே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து படந்தாலுமூடை சேர்ந்த டிரைவர் பால்ராஜ் மற்றும் மினிலாரியுடன் ரேஷன் அரிசியை உணவுபொருள் தடுப்பு போலீசாரிடம், இரணியல் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் பால்ராஜை கைது செய்தனர். மேலும், கேரளாவுக்கு கடத்தி சென்ற 8 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×