என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
Byமாலை மலர்5 July 2020 10:41 AM GMT (Updated: 5 July 2020 10:41 AM GMT)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 2 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் தினமும் புதிய உச்சத்தை தொட்டு மக்களை பதைபதைக்க வைக்கிறது. அதுபோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் இதுவரை 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் நேற்று இறந்தார். அதன் விவரம் வருமாறு:-
கள்ளக்குறிச்சி ராஜாம்பாள் நகரை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், இருமலால் மிகவும் அவதிப்பட்டார். அதோடு சுவாசிக்கவும் சிரமப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவரை கடந்த 1-ந் தேதி காலை 11.30 மணியளவில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருடைய உமிழ்நீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் முடிவில் அவர், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி காலை 10.30 மணியளவில் இறந்தார்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதுடைய விவசாயி. இவருக்கு கடந்த 1-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 7 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் தினமும் புதிய உச்சத்தை தொட்டு மக்களை பதைபதைக்க வைக்கிறது. அதுபோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் இதுவரை 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் நேற்று இறந்தார். அதன் விவரம் வருமாறு:-
கள்ளக்குறிச்சி ராஜாம்பாள் நகரை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், இருமலால் மிகவும் அவதிப்பட்டார். அதோடு சுவாசிக்கவும் சிரமப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவரை கடந்த 1-ந் தேதி காலை 11.30 மணியளவில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருடைய உமிழ்நீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் முடிவில் அவர், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி காலை 10.30 மணியளவில் இறந்தார்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதுடைய விவசாயி. இவருக்கு கடந்த 1-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 7 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X