search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொப்பரை தேங்காய்
    X
    கொப்பரை தேங்காய்

    நடப்பு ஆண்டு 3,300 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு- கலெக்டர் தகவல்

    தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 3,300 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறி உள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் உற்பத்தியினை பெருக்கி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு விவசாயிகள் உற்பத்தி செய்த கொப்பரை தேங்காய்களை மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 18½ டன் அரவைக்கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    இதே போல் நடப்பு ஆண்டில் தென்னை விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இயங்கும் பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக 3,300 டன் கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்ய இலக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    அரவை கொப்பரைக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 6 சதவீதம் இருக்குமாறும், நன்கு காயவைத்து விவசாயிகள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு தரமுள்ள கொப்பரை தேங்காய் கிலோ ரூ.99.60 வீதம் கொள்முதல் செய்யப்படும். கொப்பரைக்கான கிரயம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.

    தஞ்சை மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 23-ந்தேதி வரை 6 மாத காலம் கொள்முதல் செய்யப்படும். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி பதிவு செய்து விற்பனை செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×