search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா

    ராணிப்பேட்டை மாவட்டத்தில்ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 1,181 ஆக உயர்வு
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், திமிரி, வாலாஜா, ராணிப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மொத்தம் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,181 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் மொத்தம் 609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பினால் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 770 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 1,447 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1,260 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 265 உள்ளது. நேற்று முன்தினம் அதிகரித்த நிலையில் நேற்று கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×