என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் அருகே கோஷ்டி மோதல்-11 பேர் கைது
Byமாலை மலர்4 July 2020 12:01 PM GMT (Updated: 4 July 2020 12:01 PM GMT)
பாபநாசம் அருகே கோஷ்டி மோதலில் 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே ராஜகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 24). அதே கிராமத்தில் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் ராஜீவ்காந்தி(35). சம்பவத்தன்று இருவரும் அதே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு செல்லும்போது முன்விரோதம் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது கோஷ்டி மோதலாக மாறி இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.
இதில் மல்லிகா(40), பாண்டித்துரை(24), சக்திவேல்(24) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ரகுபதி(22), சூர்யா(22), ஜீவா(23) ரமேஷ்(47) ஆகிய 4 பேரும், ராஜீவ்காந்தி கொடுத்த புகாரின் பேரில் செல்லதுரை(21), குமரவேல்(22), பார்த்திபன்(24), பாக்யராஜ்(37), கண்ணன்(20), அருண்பாண்டியன்(25), கோபிநாத்(27) ஆகிய 7 பேரும் ஆக மொத்தம் 11 பேரையும் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா, சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அஜித், ராஜ்குமார், வினித் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X