என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை மாவட்டத்தில் தனியார் பள்ளி தாளாளர்-முதல்வர் உள்பட 13 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்4 July 2020 10:31 AM GMT
தஞ்சை மாவட்டத்தில், தனியார் பள்ளி தாளாளர்-முதல்வர் உள்பட 13 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் 465 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வந்தவர்கள் மூலம் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளி தாளாளர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 2 பேருக்கும், பள்ளி முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சென்று வந்துள்ளதையடுத்து அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மேலும் பள்ளி முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 4 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 9 பேரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் குறித்த விவரங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 19 பேரும், வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 11 பேரும் என நேற்று 30 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் 465 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வந்தவர்கள் மூலம் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளி தாளாளர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 2 பேருக்கும், பள்ளி முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சென்று வந்துள்ளதையடுத்து அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மேலும் பள்ளி முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 4 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 9 பேரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் குறித்த விவரங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 19 பேரும், வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 11 பேரும் என நேற்று 30 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X