என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் குடும்ப தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை
Byமாலை மலர்4 July 2020 9:36 AM GMT (Updated: 4 July 2020 9:36 AM GMT)
திருப்பூரில் குடும்ப தகராறில் ஆத்திரம் அடைந்த தாய் குழந்தையை கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நல்லூர்:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா ஏத்தநாயக்கன்புதூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் மகுடீஸ்வரன்(வயது 34). இவருக்கும் நிலக்கோட்டை தாலுகா புதுஎட்டிமநாயக்கன்பட்டியை சேர்ந்த முனியாண்டி மகள் நித்யாவுக்கும்(24) கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தர்ஷன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. மகுடீஸ்வரன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மெர்சன்டைசராக வேலை பார்த்து வருகிறார்.
இதனால் மகுடீஸ்வரன் தனது மனைவி, குழந்தையுடன் திருப்பூரில் ஜெய் நகர் 2-வது வீதியில் ஒரு மாடி வீட்டுக்கு குடி வந்தார். பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம் என்றாலும் நித்யாவுக்கு தனது கணவரை சரிவர பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. நித்யா சரிவர சமையல் செய்யவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மகுடீஸ்வரன் வேலைக்கு சென்று விட்டார். மதியம் 2 மணியளவில் அவர் வீட்டுக்கு திரும்பினார்.
வீட்டு கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை நித்யா பெயரை சொல்லி கதவை தட்டி பார்த்தும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றார். வீட்டுக்குள் நித்யா சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். குழந்தை தர்ஷன் படுக்கையில் பிணமாக கிடந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த மகுடீஸ்வரன் இது குறித்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லத்துரை, ஜான்சன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மகுடீஸ்வரனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், நித்யாவுக்கு மகுடீஸ்வரனை பிடிக்காததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து மகுடீஸ்வரன் நித்யாவின் பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. அவர்களும் மகளுக்கு அறிவுரை கூறி குடும்பம் நடத்த அனுப்பி வைத்து உள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நித்யா, தனது ஒரு வயது குழந்தை தர்ஷனை தலையணையால் அமுக்கி கொன்று விட்டு சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார் என தெரிய வந்து உள்ளது. இருப்பினும் இருவரது பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர்களது சாவு குறித்து தெரிய வரும். இது குறித்து ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நித்யாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்க உள்ளது.
குடும்ப தகராறில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா ஏத்தநாயக்கன்புதூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் மகுடீஸ்வரன்(வயது 34). இவருக்கும் நிலக்கோட்டை தாலுகா புதுஎட்டிமநாயக்கன்பட்டியை சேர்ந்த முனியாண்டி மகள் நித்யாவுக்கும்(24) கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தர்ஷன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. மகுடீஸ்வரன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மெர்சன்டைசராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. நித்யா சரிவர சமையல் செய்யவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மகுடீஸ்வரன் வேலைக்கு சென்று விட்டார். மதியம் 2 மணியளவில் அவர் வீட்டுக்கு திரும்பினார்.
வீட்டு கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை நித்யா பெயரை சொல்லி கதவை தட்டி பார்த்தும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றார். வீட்டுக்குள் நித்யா சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். குழந்தை தர்ஷன் படுக்கையில் பிணமாக கிடந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த மகுடீஸ்வரன் இது குறித்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லத்துரை, ஜான்சன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மகுடீஸ்வரனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், நித்யாவுக்கு மகுடீஸ்வரனை பிடிக்காததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து மகுடீஸ்வரன் நித்யாவின் பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. அவர்களும் மகளுக்கு அறிவுரை கூறி குடும்பம் நடத்த அனுப்பி வைத்து உள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நித்யா, தனது ஒரு வயது குழந்தை தர்ஷனை தலையணையால் அமுக்கி கொன்று விட்டு சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார் என தெரிய வந்து உள்ளது. இருப்பினும் இருவரது பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர்களது சாவு குறித்து தெரிய வரும். இது குறித்து ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நித்யாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்க உள்ளது.
குடும்ப தகராறில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X