என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்- குடோன் உரிமையாளர் கைது
Byமாலை மலர்3 July 2020 3:11 PM GMT (Updated: 3 July 2020 3:11 PM GMT)
குமாரபாளையத்தில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பகுதிகளில் குடோன் அமைக்கப்பட்டு அங்கிருந்து பள்ளிபாளையம், திருச்செங்கோடு, சங்ககிரி, பவானி, குமாரபாளையம் போன்ற பகுதிகளுக்கு புகையிலை பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மேட்டுக்கடை என்ற இடத்தில் ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அந்த குடோனில் புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அந்த குடோனின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி குமாரபாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குடோன் உரிமையாளர் குமாரபாளையம் மேற்கு காலனியை சேர்ந்த பூபதி (வயது 48) என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
குமாரபாளையம் பகுதிகளில் குடோன் அமைக்கப்பட்டு அங்கிருந்து பள்ளிபாளையம், திருச்செங்கோடு, சங்ககிரி, பவானி, குமாரபாளையம் போன்ற பகுதிகளுக்கு புகையிலை பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மேட்டுக்கடை என்ற இடத்தில் ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அந்த குடோனில் புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அந்த குடோனின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி குமாரபாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குடோன் உரிமையாளர் குமாரபாளையம் மேற்கு காலனியை சேர்ந்த பூபதி (வயது 48) என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X