search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென்னிக்ஸ், ஜெயராஜ்
    X
    பென்னிக்ஸ், ஜெயராஜ்

    தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

    தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
     
    அதன்படி, பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தனர்.
     
    மேலும், இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர் முத்துராஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவலர் மகாராஜன் விசாரணை நீதிபதி பாரதிதாசனை ஒருமையில் பேசியவர் என்பது நினைவிருக்கலாம். 
    Next Story
    ×