என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை மாவட்டத்தில் போலீஸ்காரர், டாக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்3 July 2020 10:02 AM GMT (Updated: 3 July 2020 10:02 AM GMT)
தஞ்சை மாவட்டத்தில் போலீஸ்காரர்- டாக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது சென்னை, வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் தஞ்சையை சேர்ந்த 3 பேரும், கும்பகோணத்தை சேர்ந்த 5 பேரும், பட்டுக்கோட்டை, ஒரத்தநாட்டை சேர்ந்த தலா 2 பேரும், மதுக்கூர், பாபநாசம், திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். இதில் கும்பகோணத்தை சேர்ந்த 4 வயது சிறுவன், அவனுடைய தாய் மற்றும் அய்யம்பேட்டையை சேர்ந்த 2 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சோதனை சாவடியில் பணியாற்றிய அதிராம்பட்டினத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும், கும்பகோணத்தை சேர்ந்த 72 வயதான பெண் டாக்டர் ஒருவரும் அடங்குவர்.
இதையடுத்து 15 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது சென்னை, வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் தஞ்சையை சேர்ந்த 3 பேரும், கும்பகோணத்தை சேர்ந்த 5 பேரும், பட்டுக்கோட்டை, ஒரத்தநாட்டை சேர்ந்த தலா 2 பேரும், மதுக்கூர், பாபநாசம், திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். இதில் கும்பகோணத்தை சேர்ந்த 4 வயது சிறுவன், அவனுடைய தாய் மற்றும் அய்யம்பேட்டையை சேர்ந்த 2 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சோதனை சாவடியில் பணியாற்றிய அதிராம்பட்டினத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும், கும்பகோணத்தை சேர்ந்த 72 வயதான பெண் டாக்டர் ஒருவரும் அடங்குவர்.
இதையடுத்து 15 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X