search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண் தற்கொலை
    X
    இளம்பெண் தற்கொலை

    கோவை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    கோவை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போத்தனூர்:

    கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 28). இவர் கோவையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். அங்கு வேலை செய்து வந்த அஞ்சலி (24) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த அஞ்சலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்கொலை செய்து கொண்ட அஞ்சலிக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆவதால் அவருடைய சாவு குறித்து கோவை ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×