search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பெரம்பலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

    பெரம்பலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், பிலிமிசை கிராமத்தில் ஒரு உரக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது கடையில் சோதனை செய்த போது, அங்கு சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பில் 2 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிலிமிசை கிராமத்தை சேர்ந்த ராஜன், சிலம்பரசன், கோவிந்தராசு மற்றும் இலுப்பைக்குடியை சேர்ந்த மருதராஜா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×