என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தந்தை மகன் மரணம் - இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
Byமாலை மலர்2 July 2020 3:13 PM GMT (Updated: 2 July 2020 6:32 PM GMT)
தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு வரும் 16-ம்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி:
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் 4 போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், பாலமுருகன் மற்றும் கணேஷ் ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனை முடிந்து தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் அவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 3 பேரையும் வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X