என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே குடும்பத்தில் பரிதாபம் : மகன் இறந்த 10-வது நாளில் தாயும் கொரோனாவுக்கு பலி
Byமாலை மலர்2 July 2020 11:16 AM GMT (Updated: 2 July 2020 11:16 AM GMT)
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மகன் இறந்த 10-வது நாளில் தாயும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கரூர்:
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் சென்னையில் இருந்து காரில் சொந்த ஊரான கரூருக்கு வந்த அவருக்கு, காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில், தனிவார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது 58 வயதான தாய்க்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 23-ந்தேதி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
கரூர் மாவட்டத்தில், இதுவரை மொத்தம் 3 பேர் கொரோனாவுக்கு பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் சென்னையில் இருந்து காரில் சொந்த ஊரான கரூருக்கு வந்த அவருக்கு, காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில், தனிவார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது 58 வயதான தாய்க்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 23-ந்தேதி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
கரூர் மாவட்டத்தில், இதுவரை மொத்தம் 3 பேர் கொரோனாவுக்கு பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X