search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது

    கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் வெங்கமேடு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விவேகானந்தா தெருவில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கோபால் (வயது 45) உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1,850 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×