search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? - மு.க.ஸ்டாலின்

    குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

    ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதை சி.சி.டி.வி. காட்சிகள் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் என முதல் அமைச்சருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா?

    இரு அப்பாவிகளின் உயிரைப் பறித்த குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? பதவியை தவறாகப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களைக் காக்க வேண்டிய முதல் அமைச்சர் செயலற்று இருப்பது ஏன்? முதல்-அமைச்சரின் பலவீனம் அதிர்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×