search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கையா நாயுடு
    X
    வெங்கையா நாயுடு

    கொரோனாவை பார்த்து பீதியடையாமல் முன் தடுப்பு முயற்சியில் மக்கள் ஈடுபட வேண்டும்: வெங்கையா நாயுடு

    கொரோனா தொற்றை பார்த்து பீதியடையாமல், முன்தடுப்பு முயற்சியில் மக்கள் ஈடுபட வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை :

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது ‘பேஸ்புக்’கில் (முகநூல்) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    பெரும்பாலான நாடுகள் பொது முடக்கத்துக்கு முடிவு கட்டி, பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. பொருளாதாரத்துக்கு ஊக்கம் கொடுக்க அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒவ்வொருவரும், விதிமுறைகளைப் பின்பற்றி, தேவையான தடுப்பு முயற்சிகளை எடுத்து, அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    முன் எப்போதும் கண்டிராத இந்தச் சுகாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உரிய போராட்டத்தில் மக்கள் ஒற்றுமையாகப் பங்கேற்க வேண்டும். ஆன்மிகம் மற்றும் அறிவியல் மீதான நமது நம்பிக்கையில் தான் நம் நாட்டின் வலிமை அமைந்துள்ளது.

    மக்கள் இந்த நிலையில், பீதியடையாமல், முன்தடுப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நமது உண்மையான வாழ்க்கைப் பங்காளி நம் உடல் தான். எனவே, சரியான உணவு வகைகளை உண்பதன் மூலமும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கான, உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலமும் நம் உடல் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், நம் உடல், நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு ஒத்துழைப்பு தரும்.

    இப்போதைய கட்டுப்பாடுகள், முடக்கப்பட்ட வாழ்க்கை முறை எப்போது முடிவுக்கு வரும்?. நமது இயல்பான வாழ்க்கைக்கு எப்போது நாம் திரும்புவோம்? என்பது போன்ற கேள்விகளுக்கு உறுதியான பதிலை அளிப்பது எளிதான விஷயமாக இருக்காது. பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாத நிச்சயமற்ற நிலை. அதன் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையே, நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். பெருநகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் அதை வெற்றிகண்டு குணமடைந்துள்ளனர். குறைவான சதவீதம் பேருக்கே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பிறந்தநாளையொட்டி, அவரை பாராட்டி நினைவு கூர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்து பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×