என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31ந்தேதி கடைசிநாள்- கலெக்டர் சந்தீப் நந்தூரி
Byமாலை மலர்28 Jun 2020 3:38 PM GMT (Updated: 28 Jun 2020 3:38 PM GMT)
தூத்துக்குடி மாவட்டத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31-ந் தேதி கடைசிநாள் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது.
2020-21-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டாரங்களில் உள்ள 73 வருவாய் கிராமங்களில் நெல் பயிர் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 1966 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. எனவே நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை மாதம் 31-ந் தேதி கடைசிநாள் ஆகும்.
பயிர் காப்பீடு செய்ய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.565 காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும். விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத்தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது.
2020-21-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டாரங்களில் உள்ள 73 வருவாய் கிராமங்களில் நெல் பயிர் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 1966 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. எனவே நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை மாதம் 31-ந் தேதி கடைசிநாள் ஆகும்.
பயிர் காப்பீடு செய்ய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.565 காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும். விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத்தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X