search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயி பலி
    X
    விவசாயி பலி

    பலாப்பழம் தலையில் விழுந்து விவசாயி பலி

    பலாப்பழம் தலையில் விழுந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காசர்கோடு:

    காசர்கோடு மாவட்டம் ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின்தாமஸ் (வயது 42). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் இருந்து பழங்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பலாப்பழம் அவருடைய தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக காசர்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காசர்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×