என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
Byமாலை மலர்27 Jun 2020 4:19 PM GMT (Updated: 27 Jun 2020 4:19 PM GMT)
கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் செல்லிமுத்து (வயது 29). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் கோவில்பட்டி மில் தெருவில் உள்ள கடையின் மாடியில் நின்று கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அவர் இரும்பு கம்பியை உயர்த்தி பிடித்தபோது, அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியது.
இதில் செல்லிமுத்து மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் செல்லிமுத்து (வயது 29). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் கோவில்பட்டி மில் தெருவில் உள்ள கடையின் மாடியில் நின்று கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அவர் இரும்பு கம்பியை உயர்த்தி பிடித்தபோது, அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியது.
இதில் செல்லிமுத்து மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X