search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    கோவை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    கோவை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ஆதம் ஷா (வயது 20). செல்வபுரத்தில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் எலெக்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தபோது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

    ஒர்க்‌ஷாப்பில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று நிர்வாகி கணேஷ் என்பவர் மீது செல்வபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×