search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்   கோப்புப்படம்
    X
    கொரோனா வைரஸ் கோப்புப்படம்

    மதுக்கூரில் தலைமறைவாக இருந்த கொரோனா நோயாளி மீட்பு

    மதுக்கூரில், தலைமறைவாக இருந்த கொரோனா நோயாளியை போலீசார் மீட்டு தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.
    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கல்யாண ஒடையை சேர்ந்த 62 வயதுடைய ஒருவர் சென்னையில் வசித்து வந்தார். கடந்த 18-ந் தேதி அன்று இவர் சென்னையில் இருந்து இ-பாஸ் மூலம் சொந்த ஊருக்கு வந்தார். இவருக்கு தஞ்சை மாவட்ட எல்லையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    கடந்த 20-ந் தேதி அன்று இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து செல்ல மருத்துவக்குழுவினர் அவரது வீட்டிற்கு சென்றனர். மருத்துவ குழுவினர் தனது வீட்டுக்கு வந்ததை அறிந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து மருத்துவ குழுவினர் அளித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மதுக்கூர் அருகே உள்ள கீழக்குறிச்சியில் போலீசார் தேடப்பட்டு வந்த நபர் நடமாடிக் கொண்டிருந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து மதுக்கூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து அங்கு சென்ற மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவரை மீட்டு தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×