என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள்- மத்திய அரசுக்கு ஜூலை 6 வரை அவகாசம் அளித்தது ஐகோர்ட்
Byமாலை மலர்25 Jun 2020 6:23 AM GMT (Updated: 25 Jun 2020 6:23 AM GMT)
ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஜூலை 6 வரை அவகாசம் அளித்துள்ளது.
சென்னை:
ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக விமல் மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்படுவதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்கவேண்டும், 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன் லைன் வகுப்புக்களை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, ஆன் லைன் வகுப்புக்களில் பங்கேற்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் கண்பாதிப்பு குறித்து 25 ஆம் தேதி அறிக்கை அளிக்க , அரசு கண் மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
அதன்படி இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஜூலை 6 வரை நீதிபதிகள் அவகாசம் அளித்தனர். மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் அளித்தும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X