என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்24 Jun 2020 10:41 AM GMT (Updated: 24 Jun 2020 10:41 AM GMT)
கரூர் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் அருகே உள்ள வடக்குபாளையம் பகுதிக்கு உட்பட்ட ஆதிதேவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 19). இவர் மூலக்காட்டானூர் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லாண்டிப்பாளையம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்த தீபன் (20), காந்திகிராமம் பெரியார்நகர் பகுதியை சேர்ந்த மோகன் (24) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் நிரப்பி விட்டு, பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட முத்துக்குமாரை, இருவரும் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி, இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் காயமடைந்த முத்துக்குமார் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, தீபனை கைது செய்தனர். தப்பியோடிய மோகனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X