search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழியர் தாக்குதல்
    X
    ஊழியர் தாக்குதல்

    பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

    கரூர் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் அருகே உள்ள வடக்குபாளையம் பகுதிக்கு உட்பட்ட ஆதிதேவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 19). இவர் மூலக்காட்டானூர் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லாண்டிப்பாளையம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்த தீபன் (20), காந்திகிராமம் பெரியார்நகர் பகுதியை சேர்ந்த மோகன் (24) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் நிரப்பி விட்டு, பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.

    இதனை தட்டிக்கேட்ட முத்துக்குமாரை, இருவரும் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி, இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் காயமடைந்த முத்துக்குமார் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, தீபனை கைது செய்தனர். தப்பியோடிய மோகனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×